ஷங்கர்ராமசுப்ரமணியன்
16 May 2025
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ நூலைப் பற்றிய பார்வை
“ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.
தனது காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சிப் பொழுதுகளின் உச்சத்தில் சல்மான் ருஷ்டி கொலைத் தாக்குதலுக்குள்ளாகி, தப்பிக்கும் நினைவுகளைப் பகிரும் புத்தகம் இது.
அவரைக் கொலைசெய்ய முயன்ற கொலையாளியைப் போலவே, நமக்கும் ‘கத்தி’ மிக அந்தரங்கமான நூல்.”
நன்றி: ஷங்கர்ராமசுப்ரமணியன் (அகழ் இணைய இதழ்)
முழுக் கட்டுரையையும் வாசிக்க:
https://akazhonline.com/?p=9465...
வருணன் ஜோ
5 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
மதிப்புரை
‘துயரை எதிர்கொள்ளும் பிரதி’
…முப்பத்துமூன்று ஆண்டுகள் அவர் உள்ளூற எதிர்பார்த்து பயந்த அத்தருணம் ஆகஸ்ட் 22, 2022 அன்று ஒரு கருத்தரங்க மேடையில் ஒரு கத்தியின் வடிவில், அதை ஏந்தியிருந்த ஒரு அடிப்படைவாத இளம் மூர்க்கனின் கரங்களின் மூலம் அவருக்கு வாய்த்தது… கொடூரமான அத்தாக்குதலில் இருந்து மிக மிக அதிர்ஷ்டவசமாக அவர், தனது இடது கண்ணைக் காவு கொடுத்து, உயிரை மீட்டுக் கொண்டார். இந்த அனுபவப் எழுத்தின் வழியாக ஒரு கொலை முயற்சிக்குப் பிறகான தனது சிந்தனைகளை, தனக்குள்ளாகவே தொகுத்து, நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…
…இப்பிரதியை எழுதியதே அவரது தனிப்பட்ட வாழ்வில் துயர் கடத்தல் மற்றும் அதன் நீட்சியாக இயல்புக்கு மீளல் என்பதான செயல்பாடுதான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒரே நேரத்தில் இப்படைப்பு தனி மனிதனாக பாதிக்கபட்ட ஒருவரது பகிர்வாகவும், உலகெங்கிலும் அதிகாரத்தாலும் அடிப்படைவாதத்தாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிற எழுத்தாளர்களுக்கான ஆதரவுக் குரலாகவும் எழுகிறது…
…இந்த ஆண்டில் ரசித்து வாசித்த படைப்புகளில் ஒன்றாக ‘கத்தி’ இருக்கிறது.
நன்றி: வருணன் ஜோ (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/story.php?story_fbid=26719397507647690&id=100000124107141&rdid=9LbKfykAQDYVka4y#
கேசவராஜ் ரங்கநாதன் (சோழராசு) (முகநூல் பதிவிலிருந்து)
20 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
நூல் பரிந்துரை
‘மீண்டெழும் அனுபவத்தின் எழுத்துகள்’
…உலகம் முழுவதும் எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் மத வெறி/சாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்கும் போதே எனக்கு நினைவில் வந்தது எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் தான்! அவருடைய மாதொருபாகன் படைப்புக்காக சாதி வெறியர்களால் அச்சுறுத்தப்பட்டார்.
மிகவும் சமீபத்திய உதாரணமாக நடந்த சில கொலைகளும் இருக்கின்றன. கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ் மற்றும் எம்.எம்.கல்புர்கி. புனேவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர் என பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள். எந்த அளவிற்கு பகுத்தறிவிற்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும் எதிரான மனப் போக்கு இருந்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி. இந்த சீழ் பிடித்த மனநிலையின் ஒரு துளியை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது!..
நன்றி: கேசவராஜ் ரங்கநாதன் (சோழராசு)
(முகநூல் பதிவிலிருந்து)
முழுக் காணொலிக்கு:
https://www.facebook.com/story.php?story_fbid=25642691735372783&id=100001759237974&mibextid=wwXIfr&rdid=jfN3iGbspbYkZLfP#