ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி எழுதிய ‘Le Petit Prince’ என்னும் பிரெஞ்சு நாவல் உலகின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. இந்த நாவல் குழந்தையின் களங்கமற்ற பார்வையின் வழியே உலகைக் காண்கிறது. இந்தப் பார்வையில் வெளிப்படும் தரிசனங்கள் பெரியவர்களுக்கான திறப்புகளாக இருக்கின்றன. பிரெஞ்சு மொழி அறிஞரும் பல்வேறு படைப்புகளைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழியாக்கம் செய்துள்ள எஸ்.ஆர். கிருஷ்ணமூத்தியின் இந்த மொழியாக்கம் கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அமைந்துள்ளது.