யதார்த்தத்திற்குள் இருக்கும் அயதார்த்தக் கூறுகளையும் சொல்லுக்குள் இருக்கும் முரணான பொருள்களையும் பற்றி செல்வசங்கரனின் கவிதைகள் பேசுகின்றன. உயிரற்ற பொருள்களைக் குறித்தும் அவை நுட்பமான குரலில் பேசுகின்றன. இதுவரை காணாத படிமங்கள், இதுவரை காட்சிப்படுத்தப்படாத நிலப்பரப்புகள், இதுவரை கேட்காத தொனிகள் ஆகியவற்றை இக்கவிதைகள் கொண்டுள்ளன. இது செல்வசங்கரனின் ஆறாவது கவிதைத் தொகுப்பு.